பூனைகளை வீட்டில் தனியாக விட்ட ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் தமது செல்லப் பிராணிகளான 43 பூனைகளை வீடு ஒன்றில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் உணவும் தண்ணீரும் இல்லாமல் தனியாக வைத்திருந்த ஆடவர் ஒருவர்மீது மார்ச் 6ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதன் காரணமாக இரண்டு பூனைகள் மாண்டன. அவை இரண்டும் மிக மோசமான நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரரான 31 வயது முஹம்மது டானியல் சுகிர்மான் மீது விலங்குகள், பறவைகள் சட்டத்தின்கீழ் 44 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அந்த 43 பூனைகளுக்குத் தேவையற்ற வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியதாலும், விலங்குநல, மருத்துவச் சேவை அதிகாரி ஒருவரைச் சந்திக்க தவறியதாலும் அந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அங் மோ கியோ அவென்யூ 6ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் ஆறாவது மாடியில் உள்ள காலியான வீட்டில், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும், 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கும் இடையே, டானியல் கவனிப்பு ஏதுமின்றி அந்த 43 பூனைகளையும் வைத்திருந்ததாக குற்றப் பத்திரிக்கைகள் காட்டின.

வீட்டில் வசிக்கும் சூழல் மோசமாக இருந்தது என்றும், அவர் செல்லப் பிராணிகளுக்கு உணவும் தண்ணீரும் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

டானியல் மார்ச் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!