விரைவுச்சாலை விபத்து; ஆடவர் மருத்துவமனையில்

புக்கிட் திமா விரைவுச்சாலையில் (பிகேஇ) கார், வேன், மோட்டார்சைக்கிள் ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து, ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் திமா விரைவுச்சாலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி காலை 9.10 மணிக்கு விபத்து நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அதே நேரத்தில் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், புக்கிட் திமா விரைவுச்சாலையின் புக்கிட் பாஞ்சாங் வெளிவழிக்கு முன்னர் விபத்து நடந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

மோட்டார்சைக்கிள் தீப்பிடித்துக்கொண்டதாகவும், தீயணைப்பானைக் கொண்டு அதை அணைத்ததாகவும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.

மோட்டார்சைக்கிள் ஓட்டுநரான 26 வயது ஆடவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார். கார் ஓட்டுநரான 73 வயது ஆடவர் விசாரணையில் உதவுவதாக காவல்துறை கூறியது.

விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!