மரின் பரேட் குழுத்தொகுதி, மெக்பர்சன், மவுண்ட்பேட்டன் ஆகியவற்றில் உள்ள குடியிருப்பாளர்களுக்கான இலவச இடைவழிப் பேருந்துச் சேவையை, கடந்த மூன்று வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 1,000 குடியிருப்பாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
ஓராண்டுக்குச் செயல்பட அந்த இலவசச் சேவைக்கு ஏறக்குறைய $1 மில்லியன் செலவாகிறது. தென்கிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம், ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் $200,000 மானியத்துடன் அந்த முன்னோடித் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த ஓராண்டு சோதனைத் திட்டத்திற்கான ஒட்டுமொத்தச் செலவு, ஒவ்வொரு பாதைக்கும் கிட்டத்தட்ட $150,000ஆக உள்ளது.
நான்கு எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைவழிப் பேருந்துச் சேவை குறித்து எழுப்பிய கேள்விகளுக்குத் திரு டான் பதில் அளித்துப் பேசினார்.

