மைக்ரோசாஃப்ட் அல்லது கிரிப்டோ.காம் போன்ற கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாக வாடிக்கையாளர்களைப் பயமுறுத்தி சிங்கப்பூரில் கடந்த மே மாதம் முதல் குறைந்தபட்சம் $1 மில்லியன் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
தங்களை அந்த நிறுவனங்களின் ஊழியர்கள் அல்லது காவல்துறையினர் என்று சொல்லிக்கொண்டு வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு முறைகேட்டிலிருந்து பணத்தைக் காப்பாற்ற வழிசொல்வதாகக் கூறி மோசடியை அரங்கேற்றிவிடுவதாகக் காவல்துறை வியாழக்கிழமை (ஜூலை 2) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அதுபோன்ற மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக மே மாதம் முதல் குறைந்தபட்சம் 30 புகார்கள் தங்களுக்கு வந்திருப்பதாக அந்த அறிக்கையில் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

