காணாமல் போனதாகக் காவல்துறையால் அறிவிக்கப்பட்ட 21 வயது பெண் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை வியாழக்கிழமை (ஏப்ரல் 30) தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, அலினா சுவா லி ஷான் என்ற அந்தப் பெண் கடைசியாக, புளோக் 539 பிடோக் நார்த் ஸ்டிரீட் 3 அருகே காணப்பட்டார்.
அப்போது, அவர் கறுப்பு நிற டி-சட்டையையும் நீல ‘குரோக்ஸ்’ காலணிகளையும் அணிந்திருந்தார்.
அவரைப் பற்றி தகவல் அறிந்தோர், காவல்துறையைத் தொடர்பு கொள்ளும்படி இதற்கு முன்பு அது வெளியிட்ட அறிக்கை கேட்டிருந்தது.

