தெங்கா, பொங்கோல் போன்ற புதிய குடியிருப்புப் பேட்டைகளில் வளர்ந்துவரும் பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பள்ளிகள் அந்த வட்டாரங்களில் இயங்கவிருக்கின்றன.
தெங்காவில் முதல் தொடக்கப்பள்ளியாக பைனியர் தொடக்கப்பள்ளி 2026ஆம் ஆண்டுமுதல் இடம்மாற்றம் செய்யப்படும்.
அதோடு, 2030ஆம் ஆண்டில் ஆங்கிலோ சீனப் பள்ளி (ஏசிஎஸ்) (தொடக்கநிலை) நியூட்டனில் உள்ள பார்க்கர் சாலையிலிருந்து புதிய தொடக்கநிலை 1 மாணவர்களைக் கொண்டு தெங்காவில் செயல்படத் தொடங்கும் என்றும் அமைச்சு தெரிவித்தது. அதே ஆண்டிலிருந்து முதல் முறையாக பெண்களையும் அந்தப் பள்ளி சேரவுள்ளனர்.
மேற்கு, வடமேற்கு வட்டாரங்களில் நான்கு பள்ளிகளும் இரண்டு ‘ஸ்பெட்’ எனப்படும் சிறப்புக் கல்வி பள்ளிகளும் திறக்கவோ இடம்மாறியோ 2026ஆம் ஆண்டுமுதல் செயல்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
செங்காங்கில் 2026ஆம் ஆண்டில் புதிய உயர்நிலைப் பள்ளி செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புக்கெட் வியூ தொடக்கப் பள்ளியை புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் வட்டாரத்திலிருந்து புக்கிட் பாத்தோக் மேற்கு வட்டாரத்திற்கு ஜனவரி 2027இல் இடமாறும்.