கடந்த சில மாதங்களாகவே கரையோரப் பூந்தோட்டத்தின் எல்லைக்குள் பறவைகள் கொல்லப்பட்டு வருகின்றன.
பறவைகள் கொல்லப்படுவது குறித்து ‘ஏக்கர்ஸ்’ எனும் விலங்கு நல ஆய்வு, கல்வி சமுதாய அமைப்பு அக்டோபர் 18ஆம் தேதி ஃபேஸ்புக் வழியாக கவலை தெரிவித்தது.
இரண்டு மாதங்களில் 4 பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. மரத்தில் பசையை ஒட்டிவைத்ததால் பறவைகள் அதில் சிக்கி இறந்தன, என அது குறிப்பிட்டது.
அதைத் தொடர்ந்து கரையோரப் பூந்தோட்டத்தின் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

