ஸ்பெயின் கொலை: சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

ஸ்பெயினில் கொல்லப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ஆட்ரி ஃபாங் மரணத்தின் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையானவர் சிங்கப்பூரர் மிட்சல் ஓங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்த 43 வயதான சந்தேக நபரைத் தமக்குத் தெரியும் என்று திருவாட்டி ஃபாங் அவரது முன்னாள் சக ஊழியரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியதாக ஸ்பானிய செய்தி நிறுவனமான ‘லா வெர்டாட்’ தெரிவித்தது.

திருவாட்டி ஃபாங், 39, தென் கிழக்கு ஸ்பெயினில் உள்ள ஸாபியாவுக்கு விடுமுறைக்காகச் சென்றபோது காணாமல் போனார்.

அவர் சிங்கப்பூர் நேரப்படி ஏப்ரல் 10ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்குக் கடைசியாக உயிருடன் காணப்பட்டார்.

திருவாட்டி ஃபாங்கின் உடல் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குக் கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. மாதின் உடலில் 30க்கும் அதிகமான கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டதாக ஸ்பானிய ஊடகங்கள் தெரிவித்தன.

சந்தேக நபர் அலிகாண்டேயில் உள்ள ஹோட்டல் அறையில் ஏப்ரல் 16ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

அவர் கைவிலங்குகளில் கொண்டுசெல்லப்பட்டதைப் புகைப்படங்கள் காட்டின.

அந்தச் சந்தேக நபரும் திருவாட்டி ஃபாங்கும் காதலர்களாக இருந்திருக்கலாம் என்று ஸ்பானிய சிவில் காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் இதற்கு முன்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!