அரசாங்கம், வேலைகளையும் தேர்ச்சிகளையும் ஒருங்கிணைக்கும் நிறுவனங்களை வேலை-திறன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கும்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் இன்று (14-02-2023) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
மேம்பட்ட திறன் என்பது பொதுவாகவே ஆக்ககரமான ஒன்றுதான். இருந்தாலும் தொழில்துறைக்கு ஏற்புடையதாகத் தெரியவரும்
ஆற்றல்மிக்க திறன்களை அடையாளம் காண்பது என்பது முத லாளிகள் - ஊழியர்கள் இருவருக்குமே சிரமமாக இருக்கலாம்.
இதனால்தான் அரசாங்கம் அத்தகைய ஒருங்கிணைப்பாளரை நியமிக்கிறது என்று திரு வோங் விளக்கினார்.
பயிற்சி என்பது ஒருவருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகளை அதிகமாக்கும். அதிக சம்பளம் பெறவும் அது வழிவகுக்கும். இதனைத் தொழில்துறை, பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், வேலை தேடித் தரும் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து அத்தகைய ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் உறுதிப்படுத்தும்.
முதற்கட்டமாக இத்திட்டம் துல்லியப் பொறியியல், சில்லறை வணிகம், மொத்த வணிகம் ஆகிய துறைகளில் இத்திட்டம் முன்னோட்ட முறையில் சோதித்துப் பார்க்கப்படும்.