தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெட்ஸ்டார் ஏஷியா ஊழியர்களுக்கு எஸ்ஐஏ குழும வேலைவாய்ப்பு; என்டியுசி ஆய்வு

1 mins read
94a4a74d-51a6-433d-9b34-7037553e9340
ஜெட்ஸ்டார் ஏஷியா விமானச் சேவை நிறுவனத்திலிருந்து வேலையிழக்கும் ஊழியர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடுகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருப்பதாக என்டியுசி கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனத்தில் வேலையிழக்கும் ஊழியர்களுக்குச் சிங்கப்பூர் ஏர்லைன்சில் ஏற்புடைய வேலைவாய்ப்புகளைன் வழங்குவது குறித்து என்டியுசி ஆராய்ந்து வருவதாக அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரைத் தனது தளமாகக் கொண்டுள்ள ஜெட்ஸ்டார் ஏஷியா விமானச் சேவை நிறுவனம் ஜூலை 31ஆம் தேதி மூடப்பட உள்ளதால் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழக்க உள்ளனர்.

இது குறித்து புதன்கிழமையன்று (ஜூன் 11) தாம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், என்டியுசி அமைப்பின் ஆகாய விமானப் பிரிவு, பொது விமானப் போக்குவரத்து ஆணையத்துடனும் சாங்கி விமான நிலையக் குழுமத்துடனும் இணைந்து பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் திரு இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.

“ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனம் மூடப்படுவது பல ஊழியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அந்த விமானச் சேவை நிறுவனத்துக்குப் பல்லாண்டு காலமாக நிறைவான சேவையை வழங்கியுள்ளனர்,” என்று திரு இங் கூறினார்.

இதன் தொடர்பில், என்டியுசியின் சிங்கப்பூர் கைத்தொழிலாளர், வணிகத் தொழிலாளர் சங்கத்துக்கு முன்கூட்டியே தகவல் தரப்பட்டதாகக் கூறிய திரு இங், ஊழியர்களுக்கு உதவ சங்கம் ஜெட்ஸ்டார் ஏஷியாவுடன் அணுக்கமாக இணைந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்