ஓசிபிசி வங்கி, சந்தை முதலீட்டில் முதன்முறையாக இந்த வாரம் $100 பில்லியனைக் கடந்துள்ளது. மத்திய கிழக்கிலிருந்து வந்த உத்தேசச் சொத்துகள், சேமிப்புக் கணக்கில் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் ஆகியவற்றால் அந்த நிலையை வங்கியால் எட்ட முடிந்தது.
மார்ச் 31ஆம் தேதிக்குப் பின் வங்கியின் பங்குகள் முதன்முறையாக $22 என்ற இலக்கைத் தாண்டியது.
வியாழக்கிழமை (ஏப்ரல் 2) நிலவரப்படி ஓசிபிசி வங்கி இதுவரை இல்லாத அளவுக்கு $22.83 என்ற நிலையை எட்டியது.
டிபிஎஸ் வங்கியின் பங்குகள் 0.2 விழுக்காடு சரிந்து $57.43ஆக முடிந்தது. யுஓபி பங்குகள் ஒரு விழுக்காடு சரிந்து $36.67ஆனது.
மத்திய கிழக்குப் பூசலால் சிங்கப்பூரில் செய்யப்படும் முதலீடுகளால் உள்ளூர் வங்கிகள் பலனடையும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

