முஸ்லிம் விவகாரங்களுக்கான முன்னாள் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் பதவி விலகியதில் உடலுறுதிப் பயிற்றுவிப்பாளர் ஒரவருக்குத் தொடர்பிருப்பதாகக் கூறிய டிக்டாக் பதிவு அகற்றப்பட்டுள்ளது.
இணையவழிப் பாதுகாப்பு ஆணையம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து அப்பதிவு அகற்றப்பட்டுவிட்டது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள அந்த ஆணையம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி செயல்படத் தொடங்கியது.

