தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபர் தர்மனிடமிருந்து விருது பெற்ற தலைசிறந்த சாரணர், சாரணியர்

1 mins read
d29dbd43-9cfa-4465-adbc-0b6c8f636a02
விருது பெற்ற சாரணர்கள் அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவரது மனைவி திருவாட்டி ஜேன் இத்தோகி ஆகியோருடன் படமெடுத்துக்கொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தலைசிறந்த சாரணர்கள், சாரணியர் ஆகியோருக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் விருதுகளை வழங்கினார்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 2ஆம் தேதியன்று இஸ்தானாவில் நடைபெற்றது.

14 வென்சர் சாரணர்களுக்கும் ஆறு சாரணியருக்கும் 2024ஆம் ஆண்டு அதிபர் சாரணர், சாரணியர் விருதுகள் வழங்கப்பட்டன.

2024ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த செயல்பாடு, சமூக சேவை, சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தலைசிறந்த சாரணர்கள், சாரணியருக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் வழக்கத்துக்கு மாறான, மிகச் சிறந்த தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்திய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

தேசிய, உலகளாவிய விவகாரங்கள் தொடர்பான திட்டங்களில் அவர்கள் பங்கெடுத்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்