ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னூட்டும் மையங்கள் எஸ்பி மொபிலிட்டிக்கு மாற்றம்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னூட்டும் மையங்கள் எஸ்பி மொபிலிட்டிக்கு மாற்றம்

1 mins read
81167492-d4d9-4f64-bf82-68ce321302f3
மாற்ற நடவடிக்கையின்போது சார்ஜ்எக்கோ பயனாளர்கள் தற்போது அவர்கள் பயன்படுத்தி வரும் செயலி வாயிலாக அந்த மின்னூட்டும் மையங்களை தொடர்ந்து அணுகலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டும் மையங்கள் ஜூலை 2 முதல் ‘எஸ்பி மொபிலிட்டி’யிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

போட்டியாளரான ‘சார்ஜ்எக்கோ’ (ChargEco) நிறுவனத்தை எஸ்பி மொபிலிட்டி கைப்பற்றியதைத் தொடர்ந்து அதன்வசம் இருந்த மின்னூட்டும் மையங்கள் எஸ்பி மொபிலிட்டியின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

அந்த மாற்ற நடவடிக்கையின்போது சார்ஜ்எக்கோ பயனாளர்கள் தற்போது அவர்கள் பயன்படுத்தி வரும் செயலி வாயிலாகத் தொடர்ந்து அந்த மின்னூட்டும் மையங்களை அணுகலாம்.

அடுத்து வரும் மாதங்களில் மின்னூட்டும் மையங்கள் படிப்படியாக எஸ்பி மொபிலிட்டியின் கட்டமைப்புக்குள் ஒருங்கிணைக்கப்படும்.

எஸ்பி குழுமம் இந்த அறிவிப்பை வியாழக்கிழமை (ஜூலை 2) வெளியிட்டது. எஸ்பி மொபிலிட்டி என்பது எஸ்பி குழுமத்தின் ஓர் அங்கம்.

மாற்றம் நிகழ்ந்தாலும் சார்ஜ்எக்கோவின் மின்னூட்டும் மையங்களின் தோற்றத்தில் மாற்றம் இருக்காது என்று எஸ்பி குழுமத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்