தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை ஆகஸ்ட் 17, மாலை 6.45க்கு தொடங்கும்

1 mins read
16673d7b-fc70-40fb-8425-8743f0dd95ed
ஆகஸ்ட் 17ஆம் தேதி அங் மோ கியோவிலுள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரியில் பிரதமர் வோங் தேசிய தினப் பேரணி உரையை ஆற்றுவார். - ஸ்ட்ரெட்ய்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தேசிய தினப் பேரணி உரை ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 6.45 மணிக்குத் தொடங்கும்.

அங் மோ கியோவிலுள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரியில் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது உரையை நிகழ்த்துவார்.

முதலில் மலாய் மொழியிலும், அதைத் தொடர்ந்து மாண்டரின் மொழியிலும் பேசுவார். பின்னர் இரவு 8 மணிக்கு ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார்.

உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் வானொலியிலும் பிரதமரின் உரை நேரடியாக ஒளிபரப்பப்படும். பிரதமர் வோங், பிரதமர் அலுவலக யூடியூப் சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பைக் காணலாம்.

நேரடி ஒளிபரப்பை தவறவிடுபவர்கள் ஆகஸ்ட் 18 முதல் www.youtube.com/pmosingapore அல்லது www.pmo.gov.sg ஆகிய தளங்களில் உரையைக் காணலாம்.

குறிப்புச் சொற்கள்