சிங்கப்பூர் எழுத்தாளர் விழா அமைப்பின் இயக்குநராக பூஜா நான்சி தொடர்வார்

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா அமைப்பின் இயக்குநராக பூஜா நான்சி தொடர்வார்

1 mins read
50bf9a64-a3ea-4972-9964-4e6d143911a6
-

சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா அமைப்­பின் இயக்­கு­ந­ராக சேவை­யாற்­றும் பூஜா நான்சி, 41, அந்­தப் பொறுப்­பில் தொடர்­வார் என்று ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமிட்­டெட் நிறு­வ­னம் நேற்று அறி­வித்­தது.

இத­னி­டையே, அறிக்கை ஒன்றை வெளி­யிட்ட நான்சி, கடந்த நான்கு ஆண்­டு­களில் எழுத்­தா­ளர் விழா அமைப்­பின் இயக்­கு­ந­ரா­கச் சேவை­யாற்­றி­யது தனக்குப் பெரு­மை­யாக இருப்­பதா­கக் குறிப்­பிட்­டார்.

திரு­வாட்டி நான்சி, அந்­தப் பொறுப்பை 2019ல் இயோவ் காய் சாயி­டம் இருந்து ஏற்­றார். அதன்­மூ­லம் அவர் எழுத்­தா­ளர் விழா அமைப்­பின் மூன்­றா­வது இயக்­கு­ந­ரா­க­வும் அந்­தப் பத­வியை வகிக்­கும் முதல் பெண்­ம­ணி­யா­க­வும் ஆனார்.

எழுத்­தா­ளர் விழா அமைப்பு 2010ல் உரு­வாக்­கப்­பட்­டது. தேசிய கலை மன்­றத்­தால் ஆணை பிறப்­பிக்­கப்­பட்டு ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமிட்­டெட் நிறு­வ­னத்­தால் சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழாவுக்கு ஏற்­பாடு செய்­யப்படுகிறது.

அது, உள்­ளூர், அனைத்­துலக இலக்­கிய புல­மை­யா­ளர்­களை ஒருங்கே கொணர்ந்து அவர்­கள் பயி­ல­ரங்­கு­க­ளி­லும் குழு விவா­தங்­க­ளி­லும் விரி­வு­ரை­க­ளி­லும் பங்­கேற்­கு­மாறு செய்­கிறது.