சிங்கப்பூர் அனைத்துலக நெடுந்தொலைவு ஓட்ட முன்பதிவில் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள்

சிங்கப்பூர் அனைத்துலக நெடுந்தொலைவு ஓட்ட முன்பதிவில் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள்

1 mins read
f7104d0d-d703-47e0-8582-efdef9a53fed
திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 27) பதிவு செய்ய முயன்ற சில ஓட்டப்பந்தய வீரர்கள், கட்டணம் செலுத்த முடியாமல் போனதாக இணையத்தளத்தில் தங்களுக்கு ஒரு செய்தி வந்ததாகவும் ஆனால் அதன்பிறகு வங்கிகளால் அந்தத் தொகை வசூலிக்கப்பட்டதாகவும் கூறினர். - படம்: சாவ்பாவ்

பிஓய்டி சிங்கப்பூர் அனைத்துலக நெடுந்தொலைவு ஓட்ட முன்பதிவின் முதல் நாளில் சிக்கல்கள் ஏற்பட்டன. பதிவின்போது கட்டணம் செலுத்துவதில் பிரச்சினைகள் ஏற்பட்டதாகப் பலரும் தெரிவித்தனர்.

திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 27) பதிவு செய்ய முயன்ற சில ஓட்டப்பந்தய வீரர்கள், கட்டணம் செலுத்த முடியாமல் போனதாக இணையத்தளத்தில் தங்களுக்கு ஒரு செய்தி வந்ததாகவும் ஆனால் அதன்பிறகு வங்கிகளால் அந்தத் தொகை வசூலிக்கப்பட்டதாகவும் கூறினர்.

நெடுந்தொலைவு ஓட்டத்துக்கான பதிவுக் கட்டணம் உள்ளூர் பங்கேற்பாளர்களுக்கு $188.

வெளிநாட்டு பங்கேற்பாளர்களுக்கு $208 ஆகும். அதே வேளையில், அரை தூர நெடுந்தொலைவு ஓட்டப் பதிவுக் கட்டணம் உள்ளூர் பங்கேற்பாளர்களுக்கு $168, வெளிநாட்டவர்களுக்கு $188.

10 கிலோமீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கு உள்ளூர் பங்கேற்பாளர்கள் $130 மற்றும் வெளிநாட்டவர்களுக்கு $150 செலவாகும். முன்பதிவு செப்டம்பர் 30 அன்று அல்லது அனைத்து இடங்களும் முழுமையாக நிரம்பிவிட்டபோது முடிவடையும். இந்த ஆண்டுக்கான நிகழ்வில் அனைத்துப் பந்தயப் பிரிவுகளிலும் சேர்த்து 52,000 பங்கேற்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று பந்தய ஏற்பாட்டாளர்கள் முன்னதாக அறிவித்தனர்.

பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான தொழில்நுட்பக் கோளாறு குறித்து தங்களுக்குத் தெரியும் என்று பந்தய ஏற்பாட்டாளர்கள் இன்ஸ்டகிராமில் பதிவிட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பரிவர்த்தனையை படம் எடுத்து அதை மின்னஞ்சல் செய்யுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

“ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் கட்டணம் தொடர்பான அனைத்துச் சிக்கல்களும் உடனடியாகத் தீர்க்கப்படும் என உறுதியளிக்கிறோம்,” என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்