சனிக்கிழமை (செப்டம்பர் 5) காலை நிலவரப்படி சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்தது.
அப்பகுதியில் பிஎஸ்ஐ குறியீடு 102ஆகப் பதிவானது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) முதல் இதுவரை சிங்கப்பூரின் மூன்று பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற கட்டத்தை எட்டியுள்ளது.
பிறகு சனிக்கிழமை காலை ஒன்பது மணி நிலவரப்படி மத்தியப் பகுதியில் பிஎஸ்ஐ குறியீடு 115ஆகப் பதிவானது. மேற்குப் பகுதியில் காற்றித் தரம் சற்று மேம்பட்டு பிஎஸ்ஐ குறியீடு 98ஆகப் பதிவானது.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் குறியீடு 96ஆகப் பதிவானது.


