தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கொவிட்-19 விதிமுறைகள் மார்ச் 1ஆம் தேதி முதல் தளர்த்தப்படும் என மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.
கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களது தங்கும் விடுதிகளிலேயே இருந்து குணமடையலாம் அல்லது பலதுறை மருந்தகங்களுக்குச் சென்று மருத்துவரைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே கொவிட்-19 பரிசோதனைகள் செய்யப்படும்.
வெளிநாட்டு ஊழியர்கள் சமூக இடங்களுக்குச் செல்ல இனி விண்ணப்பிக்கத் தேவையில்லை.
பிப்ரவரி 13ஆம் தேதி முதல் ஊழியர்கள் ‘பாப்புலர் பிளேஸ் (Popular Place)’ அட்டைகளை பயன்படுத்த தேவையில்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.