ஸ்கூட் விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு; 3 மணி நேரம் தாமதம்

தாய்லாந்தின் பேங்காக் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக மீண்டும் பேங்காக்கிற்குத் திரும்பியது.

சம்பவம் திங்கட்கிழமை (மே 8) பிற்பகல் நடந்தது.

விமானம் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4:56க்கு பேங்காக்கில் இருந்து புறப்பட்டு இரவு 7:15 மணிக்கு சிங்கப்பூர் வரவிருந்தது.

ஆனால் விமானத்தின் குளுரூட்டியில் கோளாறு ஏற்பட்டதால் அதில் இருந்த நீர் ஆவிகள் புகைபோல் விமானத்திற்குள் பரவின.

அது தொழில்நுட்பக்கோளாறு  அல்ல என்றாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் மீண்டும் பேங்காக் திருப்பி அனுப்பப்பட்டதாக ஸ்கூட் பேச்சாளர் தெரிவித்தார். 

விமானத்தில் 230 பயணிகளும் 8 சிப்பந்திகளும் இருந்தனர். 

கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானம் இரவு 7:27 மணிக்கு பேங்காக்கில் இருந்து புறப்பட்டு இரவு 10:26 மணிக்கு சிங்கப்பூர் வந்தது.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!