ஆற்றில் பாய்ந்த காரிலிருந்து மீட்கப்பட்ட சிங்கப்பூரர் உயிரிழப்பு

ஆற்றில் கவிழ்ந்த காரிலிருந்து மீட்கப்பட்ட 49 வயது சிங்கப்பூரர், சிகிச்சை பலனின்றி ஐந்து நாள்களுக்குப்பின் உயிரிழந்தார்.

அந்த ஆடவர் சென்ற கார், இம்மாதம் 15ஆம் தேதி மலேசியாவின் கோத்தா திங்கி ஆற்றுக்குள் பாய்ந்தது.

அந்த காரிலிருந்து மீட்கப்பட்ட அவர், சுயநினைவற்ற நிலையில் மலேசிய மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் காயம் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

பின்னர் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மார்ச் 20ஆம் தேதி அவர் உயிரிழந்துவிட்டதாக ஷின் மின் நாளிதழ் செய்தி தெரிவித்தது.

அவர் ஒரு சுற்றுலா வழிகாட்டி என்றும் ஜோகூர் பாரு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்தது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

விபத்து குறித்து இன்னும் விசாரணை நடந்து வருவதாகக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!