டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற டோட்டோ குலுக்கலில் பரிசுத் தொகை $12.8 மில்லியனாக உயர்ந்ததால் வழக்கத்தைவிட அதிகமானோர் குலுக்கு சீட்டுகளை ஆர்வத்துடன் வாங்கினர்.
அக்குலுக்கலில் ‘குரூப் 1’ பிரிவில் வெற்றியாளர் எவரும் இல்லாததால், ‘குரூப் 2’ பிரிவில் 12 வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகை பிரித்து வழங்கப்பட்டது. வெற்றியாளர்களுக்கு தலா $1.19 மில்லியன் கிடைத்தது.
அந்தக் குலுக்கலில் டோட்டோ வாங்கவில்லையே என்று நினைப்பவர்களுக்குக் கவலை வேண்டாம்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சிங்கப்பூர் பூல்ஸ் மற்றொரு மாபெரும் குலுக்கலை நடத்தவுள்ளது.
புத்தாண்டின் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் அக்குலுக்கலில் பரிசுத் தொகை $5 மில்லியனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குலுக்கலுக்கென பிரத்தியேக இணையப்பக்கமும் அமைக்கப்பட்டுள்ளது. என்ன எண்களைத் தேர்ந்தெடுக்கலாம் என யோசிப்பவர்களுக்கு குலுக்கு எண்களைத் தற்செயலாக தேர்வுசெய்யும் முறை அதில் இடம்பெறுகிறது.
வழக்கமாக திங்கட்கிழமைகளிலும் வியாழக்கிழமைகளிலும் நடைபெறும் டோட்டோ குலுக்கல் ஜனவரி 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
அந்தக் குலுக்கலுக்காக அதிகமானோர் டோட்டோ வாங்குவர் என எதிர்பார்க்கப்படுவதால், வழக்கமாக மாலை 6.30 மணிக்கு நிறைவுபெறும் குலுக்குச் சீட்டு விற்பனை அன்றைய தினம் இரவு 9 மணி வரை நீடிக்கும்.
எண் 210 மிடில் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கட்டடத்தில் இரவு 9.30 மணிக்கு குலுக்கல் நடைபெறும்