தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிசம்பர் 20 அன்று உயர்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை முடிவுகள்

1 mins read
0e5946f2-3c9c-42c1-8b70-8aa7fda42efb
படம்: - தமிழ்முரசு

அடுத்த ஆண்டு உயர்­நி­லை ஒன்றுக்கான மாண­வர் சேர்க்கை முடி­வு­கள் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளி­யி­டப்­படும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாண்டு தொடக்­கப்­பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்வு எழு­திய மாண­வர்­கள், உயர்­நி­லைப் பள்­ளிச் சேர்க்­கைக்­கான விண்­ணப்­பத்­து­டன் சிங்­கப்­பூர் தொலை­பேசி எண்ணை இணைத்தி­ருந்­தால், குறுஞ்­செய்தி வாயி­லாக அவர்­க­ளுக்கு முடி­வு­கள் தெரிவிக்கப்­படும்.

மாணவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழின் எண் அல்லது அடையாள அட்டை எண் மற்றும் உயர்நிலை ஒன்றாம் நிலைக்கான தனிநபர் அடையாள எண் அல்லது தொடக்கப்பள்ளிக்கான தனிநபர் அடையாள எண் ஆகியவற்றை ‘எஸ் 1-இண்டர்நெட் சிஸ்டம்’ எனும் இணையத்தளத்தில் உள்ளீடு செய்தும் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

முடி­வு­க­ளைப் பெற்­றுக்­கொண்ட மாண­வர்­கள், புதிய பள்­ளிக்கு நேரில் செல்­ல­வேண்­டிய அவ­சி­யமில்லை என்று அமைச்சு கூறி­யது. 

புத்தகங்களையும் சீருடைகளையும் எங்கு வாங்குவது, பள்ளிக்கு எப்போது வர வேண்டும் போன்ற விவரங்களை அறிய மாணவர்கள் பள்ளியின் இணையத்தளங்களை அணுகலாம்.

குறிப்புச் சொற்கள்