டிசம்பர் 20 அன்று உயர்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை முடிவுகள்

அடுத்த ஆண்டு உயர்­நி­லை ஒன்றுக்கான மாண­வர் சேர்க்கை முடி­வு­கள் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளி­யி­டப்­படும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாண்டு தொடக்­கப்­பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்வு எழு­திய மாண­வர்­கள், உயர்­நி­லைப் பள்­ளிச் சேர்க்­கைக்­கான விண்­ணப்­பத்­து­டன் சிங்­கப்­பூர் தொலை­பேசி எண்ணை இணைத்தி­ருந்­தால், குறுஞ்­செய்தி வாயி­லாக அவர்­க­ளுக்கு முடி­வு­கள் தெரிவிக்கப்­படும்.

மாணவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழின் எண் அல்லது அடையாள அட்டை எண் மற்றும் உயர்நிலை ஒன்றாம் நிலைக்கான தனிநபர் அடையாள எண் அல்லது தொடக்கப்பள்ளிக்கான தனிநபர் அடையாள எண் ஆகியவற்றை ‘எஸ் 1-இண்டர்நெட் சிஸ்டம்’ எனும் இணையத்தளத்தில் உள்ளீடு செய்தும் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

முடி­வு­க­ளைப் பெற்­றுக்­கொண்ட மாண­வர்­கள், புதிய பள்­ளிக்கு நேரில் செல்­ல­வேண்­டிய அவ­சி­யமில்லை என்று அமைச்சு கூறி­யது. 

புத்தகங்களையும் சீருடைகளையும் எங்கு வாங்குவது, பள்ளிக்கு எப்போது வர வேண்டும் போன்ற விவரங்களை அறிய மாணவர்கள் பள்ளியின் இணையத்தளங்களை அணுகலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!