விமானச் சேவை ரத்தானதால் பயணிகளுக்கு சிரமம்; மன்னிப்புக் கோரியது எஸ்ஐஏ

கோலாலம்பூரில் இருந்து புதன்கிழமை (ஏப்ரல் 26) இரவு புறப்பட்டு சிங்கப்பூர் வரவிருந்த பயணிகள், கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே பல மணி நேரம் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

அவர்கள் பயணம் செய்யவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) எஸ்கியூ125 விமானத்தில் தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டதே அதற்குக் காரணம். 

அந்த விமானம், 159 பயணிகள், 13 ஊழியர்களுடன் கோலாலம்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு சிங்கப்பூருக்கு இரவு 9.50 மணிக்கு வந்து தரையிறங்க இருந்தது.

விமானம் தரையில் இருந்தபோதே அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட்டது என்று எஸ்ஐஏ பேச்சாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. 

பிறகு விமானம் நிற்கும் இடத்திற்குத் திரும்பி அனைத்து பயணிகளும் சிப்பந்திகளும் அதிலிருந்து வெளியேறினர். 

விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினையைச் சரிசெய்ய அதிக நேரம் தேவைப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளை வேறு விமானத்திற்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது. 

ஆனாலும் அந்த யோசனை பிறகு ஒழுங்குமுறை காரணங்களுக்காக கைவிடப்பட்டது. 

விமானச் சேவை ரத்தானதால் ஏற்பட்ட சங்கடங்களுக்காக தான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக எஸ்ஐஏ தெரிவித்தது. 

பயணிகள் வியாழக்கிழமை கோலாலம்பூரில் இருந்து வேறு விமானங்களில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!