பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு தொடர்பில் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கபூர்வமான மேம்பாடுகள் காணப்பட்டுள்ளபோதும், தொடர்ந்து பல பிரச்சினைகள் உள்ளன.
உதாரணத்திற்கு, பெண்களிடையே இதய நோய் இன்னும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை. இதய நோய் உள்ள ஆண்களுக்கு வேறுபட்ட அறிகுறிகள் உள்ளன. அதோடு, பெண்களை மட்டுமே பாதிக்கும் புற்றுநோய்களும் உள்ளன.
அத்தகைய விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த, திங்கட்கிழமை உடன்படிக்கை ஒன்று கையெழுத்தானது.
ஆசியாவை மையமாகக் கொண்டு, சுகாதாரம் பற்றி பெண்கள் கொள்ளும் கவலை குறித்த ஆய்வு, கல்வித் திட்டங்களில் ஒன்றுசேர்ந்து செயல்பட, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியில் உள்ள ஆசிய பெண்கள் சுகாதாரத்திற்கான உலகளாவிய நிலையமும் பாரிஸ் சிட்டே பல்கலைக்கழகத்தின் சுகாதாரப் பள்ளியும் அந்த உடன்படிக்கையைச் செய்துகொண்டன.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கையெழுத்தான எட்டு உடன்படிக்கைகளில் அதுவும் ஒன்று.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் பிரான்ஸ் மேல்நிலைக் கல்வி, ஆய்வுத் துறை அமைச்சர் சில்வி ரிட்டயூவும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பொறியியல், இயற்பியல், கணினியியல் உள்ளிட்டவை தொடர்பில் சிங்கப்பூர், பிரெஞ்சு கழகங்களுக்கு இடையிலான ஆய்வு ஒத்துழைப்புக்காகவும் மற்ற உடன்படிக்கைகள் கையெழுத்தாயின.