சிங்கப்பூர் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் அனைத்துவிதமான கொவிட்-19 எல்லை கட்டுப்பாடுகளை நீக்குவதாக அறிவித்துள்ளது.
அதன்மூலம் வரும் திங்கள்கிழமை முதல் கொவிட்-19 தடுப்பூசி போடாதவர்கள் சிங்கப்பூருக்குள் வரும்போது பயணத்திற்கு முன் தங்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழை இனி சமர்ப்பிக்கத் தேவையில்லை.
அதேபோல் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆதாரங்களைப் பயணத்திற்கு முன் காட்டவும் தேவையில்லை.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குறுகியகால வருகையாளர்கள் இனி கொவிட்-19 சிகிச்சைக்கான பயண காப்புறுதி வாங்கத்தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் உலகநாடுகளில் நோய்ப்பரவல் அதிகரித்தால் எல்லை கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வரக்கூடும் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூருக்குள் வருபவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவோ கொவிட் பரிசோதனை செய்யவோ தேவையில்லை.