சுகாதார அமைச்சர் ஓங் யி காங், சமூக ஊடகத்தால் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் களைய சிங்கப்பூர் செயல்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
சமூக ஊடகங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட திரு ஓங், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) செய்தியாளர்களிடம் பேசினார்.
சமூக ஊடகங்களில் வரும் காணொளிகள், சமூக ஊடகக் கணக்குகள்வழி இளையப் பயனீட்டாளர்களைப் பெரியவர்கள் நேரடியாகத் தொடர்புகொள்ள வகைசெய்யும் அம்சம் ஆகியவை பதின்ம வயதினரைப் பாதிக்கக்கூடும் என்றார் திரு ஓங்.
இளையர்களிடையே சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆராய சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.
அந்தக் குழு அதன் ஆய்வறிக்கையை நிறைவுசெய்யும் நிலையில் இருப்பதாகச் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங் சொன்னார்.

