புவாங்கோக் எம்ஆர்டி நிலையத்தில் மின்தேக்கியிலிருந்து வெளியான புகை

புவாங்கோக் எம்ஆர்டி நிலையத்தில் மின்தேக்கியிலிருந்து வெளியான புகை

1 mins read
7ab97fc1-25bd-4703-a47f-8ea00b5b7475
இச்சம்பவம் புதன்கிழமை (ஜூலை 29) மாலை ஐந்து மணியளவில் நிகழ்ந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

புவாங்கோக் எம்ஆர்டி நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 29) பயணி ஒருவரின் பையில் இருந்த மின்தேக்கியிலிருந்து புகை வெளியானது.

அதனால் அந்நிலையத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இச்சம்பவம் மாலை ஐந்து மணியளவில் நிகழ்ந்ததாக வடகிழக்கு ரயில் பாதையில் சேவைகளை நடத்தும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது தெரிவித்தது.

யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

குறிப்புச் சொற்கள்