சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தின் இணைய சூதாட்டத்தளத்தில் இருந்து தாங்களாகவே விலகிக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2022ல் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகக் கூடியது.
காற்பந்து போன்ற விளையாட்டுகளின் மீது பந்தயம் கட்டுவதை நிறுத்திவிடும் முயற்சியாக அவர்கள் அந்தச் சுயமுடிவை எடுத்தனர்.
சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் இருந்து சென்ற ஆண்டில் சுயமாக விலகிக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,731 ஆக இருந்தது.
இந்த எண்ணிக்கை, 2021ல் 4,802 ஆகவும் 2020ல் 4,011 ஆகவும் 2019ல் 3,720 ஆகவும் இருந்தது. சூதாட்டப் பிரச்சினைக்கு எதிரான தேசிய மன்றம் இந்த மாதம் இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
மனநலக் கழகத்திலும் இந்த மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளிலும் சூதாட்டம் தொடர்பில் ஆலோசனை நாடிய மக்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அடிப்படையில் கொஞ்சம் அதிகரித்துள்ளது.
அதிகம் பேர் விலகிக்கொண்டு இருப்பது பற்றி கருத்து கூறிய சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம், இது ஓர் ஆக்க கரமான மேம்பாடு என்றது.