சுவிட்சர்லாந்தில் இருக்கும் டாவோசில் இம்மாதம் நடைபெறஉள்ள உலகப் பொருளியல் மன்றத்தில் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் உரையாற்ற இருப்பதாக வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. சிங்கப்பூரின் பொருளியல், சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்னம், 'வேலைகள், திறன்களுக்கான எதிர்காலம்', 'ஓய்வுகாலத் திட்டங்களின் சவால்கள்', 'அனைத்துலக நாணயம், நிதித் திட்டம்', 'ஆசியான்', 'அனைத்துலக உற்பத்தியின் எதிர்காலம்' ஆகிய தலைப்புகளில் தொடர்புடைய அமர்வுகளில் உரையாற்ற இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
அனைத்துலகப் பொருளியல் மன்றத்தில் உரையாற்றவிருக்கும் துணைப் பிரதமர்
1 mins read

