மறுசீரமைக்கப்பட்ட சுல்தான் பள்ளிவாசல்

மறுசீரமைக்கப்பட்ட சுல்தான் பள்ளிவாசல்

2 mins read
fe2d5add-33bb-4465-ba13-87ce4a75346d
-

ஓராண்டு கால புதுப்­­­பிப்பு வேலை­­­­­­­களுக்­­­­­­­குப் பிறகு கம்போங் கிளாமில் அமைந்­­­­­­­தி­­­­­­­ருக்­­­­­­­கும் சுல்தான் பள்­­­­­­­ளி­­­­­­­வா­­­­­­­சல் புதிய வச­­­­­­­தி­­­­­­­களு­­­­­­­டன் சீரமைக்­­­­­­­கப்­­­­­­­பட்­­­­­­­டுள்­­­­­­­ளது. பள்­­­­­­­ளி­­­­­­­வா­­­­­­­ச­­­­­­­லில் மறு­­­சீ­­­ரமைப்­­­புப் பணிகள் நிறை­­­வுற்­­­றதைக் குறிக்கும் விதமாக முதன்மைக் கட்­­­­­­­ட­­­­­­­டத்­­­­­­­தில் இருக்­­­­­­­கும் பெயர்ப் பலகைக்­­­­­­­கல் ஒன்றை பிர­­­­­­­த­­­­­­­மர் லீ சியன் லூங் நேற்று திறந்­­­­­­­து வைத்­­­­­­­தார். அவ­­­­­­­ரு­­­­­­­டன் தொடர்பு, தகவல் அமைச்­­­­­­­ச­­­­­­­ரும் முஸ்லிம் விவ ­­­­­­­கா­­­­­­­ரங்களுக்­­­­­­­குப் பொறுப்பு வகிக்­­­­­­­கும் அமைச்­­­­­­­ச­­­­­­­ரு­­­­­­­மான டாக்டர் யாக்கூப் இப்­­­­­­­ரா­­­­­­­ஹிம் கலந்­­­­­­­து­­­­­­­கொண்டார். இந்தப் பள்­­­­­­­ளி­­­­­­­வா­­­­­­­சலை முக்­­­­­­­கி­­­­­­­ய­­­­­­­மான அடை­­­­­­­யா­­­­­­­ளம் என்றும் வீட்டை நினை­­­­­­­வு­­­­­­­படுத்­­­­­­­தும் இடம் என்றும் பிர­­­­­­­த­­­­­­­மர் குறிப்­­­­­­­பிட்­­­­­­­டார். இரண்டு புதிய மின்­­­தூக்­­­கிகள், 390 பேர் அம­­­ரக்­­­கூ­­­டிய அரங்கம் ஆகியவை அமைக்­­­கப்­­­பட்­­­ட­­­து­­­டன் முதன்மைக் கட் டடத்தில் நீராட்டு இடங்களும் விரி­­­வு­­­படுத்­­­தப்­பட்­­­டுள்­­­ளன.

உடைந்த கத­­­­­­­வு­­­­­­­கள், சன் ­­­­­­­னல்­கள் முன்பு இருந்தது ­போன்ற வடி­­­­­­­வமைப்­­­­­­­பி­­­­­­­லும் நிறத்­­­­­­­தி­­­­­­­லும் மீண்டும் அமைக்­­­­­­­கப்­­­­­­­ பட்­­­­­­­டுள்­­­­­­­ளன. தங்க நிறத்­­­­­­­தி­­­­­­­லான குவி ­ மா­­டங்­­­­­­­களுக்கு சிறப்­­­­­­­புக் கவ­­­­­­­னத்­­­­­­­து­­­­­­­டன் புதியவண்­­­­­­­ணப்­­­­­­­ பூச்­­­­­­­சும் செய்­­­­­­­யப்­­­­­­­பட்­­­­­­­டுள்­­­­­­­ளது. 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்­­­­­­­தில் பணிகள் தொடங்­­­­­­­ கி­­­­­­­ய­­­­­­­போது மறு­­­­­­­சீ­­­­­­­ரமைப்­­­­­­­புக்­­­­­­­காக $3.65 மில்­­­­­­­லி­­­­­­­யன் செல­­­­­­­வா­­­­­­­கும் எனக் கணக்­­­­­­­கி­­­­­­­டப்­­­­­­­பட்­­­­­­­டது. 1826ஆம் ஆண்டு நிறு­­­­­­­வப்­­­­­­­பட்ட இந்தப் பள்­­­­­­­ளி­­­­­­­வா­­­­­­­சல் 1975ஆம் ஆண்டு தேசிய நினை­­­­­­­வுச் ­­­­­­­சின்­­­­­­­ன­­­­­­­மாக அறி­­­­­­­விக்­­­­­­­கப்­­­­­­­பட்­­­­­­­டது. தேசிய நினை­­­­­­­வுச்­ சின்­­­­­­­னங்களுக்­­­­­­­கான நிதி­­­­­­­யி­­­­ல் இருந்து மறு­­­­­­­சீ­­­­­­­ரமைப்­­­­­­­புக்­­­­­­­கான செலவின் ஒரு பகுதியை ஈடு­­­­­­­கட்­­­­­­­டு­­­­­­­வதற்­­­­­­­காக $1.02 மில்­­­­­­­லி­­­­­­­யனை தேசிய மர­­­­­­­புடைமைக் கழ­­­­­­­கம் வழங்­­­கி­­­யது.

பள்­­­­­­­ளி­­­­­­­வா­­­­­­­ச­­­­­­­லின் வரலாறு, பாரம்ப­­­­­­­ரி­­­­­­­யம் ஆகி­­­ய­­­வற்றை ஆவ­­­­­­­ணப்­­­­­­­படுத்­­­­­­­தும் விதத்­­­­­­­தில் நேற்றைய நிகழ்ச்­­­­­­­சி­­­­­­­யில் ஒரு புத்­­­­­­­த­­­­­­­க­­­­­­­மும் வெளி­­­­­­­யி­­­­­­­டப்­­­­­­­ பட்­­­­­­­டது.

மறுசீரமைக்கப்பட்ட சுல்தான் பள்ளிவாசலில் பிரதமர் லீ சியன் லூங் (வல மிருந்து இரண்டாவது), அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் (வலமிருந்து மூன் றாவது) ஆகியோருடன் சமயத் தலைவர்கள். படம்: பெரித்தா ஹரியான்