லிட்டில் இந்தியாவில் பொங்கல்

லிட்டில் இந்தியாவில் பொங்கல்

1 mins read
8e44b674-d236-47b0-932c-259d2cfa3639
-

லிட்டில் இந்தியாவில் நடைபெறும் பொங்கல் கொண்டாட்டத்தின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற 35 பானைகளில் கூட்டுப் பொங் கல் நிகழ்ச்சியில் தமிழர்களுடன் சேர்ந்து பிற இனத்தவர்களும் இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா போன்ற வெளிநாட்டினரும் பங் கேற்று பொங்கல் வைப்பது எப் படி என்பதைத் தெரிந்து கொண் டனர். பானையில் பால் ஊற்றி அது கொதித்து வந்ததும் "பொங் கலோ பொங்கல்" என்று கூவி, பின்னர் அதனுடன் மற்ற பொருட் களைச் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் சாதம் சமைக்கும் முறையை அவர்கள் செய்து பார்த்தனர். அவர்களுக்கு உள் ளூர் பெண்கள் உதவி செய்தனர்.

நேற்று நடைபெற்ற கூட்டுப் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில்சீனப் பெண்மணியுடன் பல இனத்தவரும் பங்கேற்றனர். படம்: லிஷா