சான்: மீள்திறன் கொண்ட சமூகத்தை உருவாக்க முற்பட வேண்டும்

சான்: மீள்திறன் கொண்ட சமூகத்தை உருவாக்க முற்பட வேண்டும்

1 mins read

வெற்றி என்­ப­தற்கு ஒரே­மா­தி­ரி­யான வரை­யறையை வகுத்­துக்­கொண்டு அதனை அடை­வதற்கு கண்­மூ­டித்­த­ன­மாக முயற்சி செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்க சிங்கப்பூரர்கள் முற்­பட்­டால், அது மிகவும் வருத்­த­ம­ளிக்­க­கூ­டி­யது என்று பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் சான் சுன் சிங் கூறி­யுள்­ளார். 'செயின்ட் கேலன் சிம்­போ­சி­யம் சிங்கப்­பூர் ஃபோரம்' எனும் நிகழ்ச்­சி­யில் துவக்­க­வுரையாற்­றி­ய­போது திரு சான் இவ்வாறு குறிப்­பிட்­டார். சுவிட்­சர்­லாந்­துக்கு வெளியே இந்நிகழ்ச்சி முதன் முறையாக நடத்தப்படுகிறது. அந்த நிகழ்­வில் பொரு­ளி­யல் வளர்ச்சி குறித்து உரை­யாற்­றி­ய­து­டன் பார்வை­யா­ளர்­களு­டன் கலந்­துரை­யா­ட­லி­லும் ஈடு­பட்­டார் திரு சான்.

மானு­ட­வி­யல், சமூக அறி­வி­யல் போன்ற பாடங்களை­விட அறி­வி­யல், கணிதம் ஆகிய துறை­களில் பயில்­வோ­ருக்­கும் ராஃ­பிள்ஸ் கல்வி நிலையம் போன்ற­வற்­றில் பயில்வோ­ருக்­கும் சிங்கப்­பூர் சமூகம் சாத­க­மாக இருப்­பது குறித்த அக்­கறையை நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற சில மாண­வர்­கள் எழுப்­பி­னர்.