பேருந்தில் மடிக்கணினியைத் தொலைத்த மாணவி; பத்திரமாக மீட்டுத் தந்த ஓட்டுநர்

பேருந்தில் மடிக்கணினியைத் தொலைத்த மாணவி; பத்திரமாக மீட்டுத் தந்த ஓட்டுநர்

1 mins read
d8240b13-6c99-493c-a16b-0eabc04b4075
-

அடுத்து வரும் வாரத்­தில் நான்கு காட்­சி­ய­ளிப்­பு­கள், ஐந்து திட்­டப் ­ப­ணி­களை முடித்­துச் சமர்ப்­பிக்க வேண்டிய கட்­டா­யத்­தில், இக்­கட்­டான சூழலில் மடிக்­க­ணினி காணாமல் போகவே கதி­க­லங்­கிப் போனார் பல­துறைத் தொழிற்­கல்­லூரி மாணவி செல்சி சோ. தாம் பயணம் செய்த பேருந்­தில் தொலைத்­தி­ருக்­க­லாமோ என்ற சந்­தே­கத்­தில் யூனோஸ் பேருந்து நிலை­யத்­துக்கு விரைந்தார் செல்சி. தாம் பயணம் செய்த பேருந்­தின் ஓட்­டு­நரைப் பற்றிய சரியான விவ­ரங்களை நினைவுகூர முடி­யா­விட்­டா­லும் அதி­ச­யம் நிக­ழக்­கூடும் என்ற எதிர்­பார்ப்­பு­டன் பேருந்து யூனோஸ் நிலை­யத்திற்கு வரும்­வரை காத்­ தி­ருந்தார் அவர்.

கடந்த திங்கட்­கிழமை இரவு நேரத்­தில் புக்கிட் பாத்­தோக்­கில் இருந்து யூனோஸை நோக்கிச் சென்­று­கொண்­டி­ருந்த பேருந்­துச் சேவை எண் 61ஐ திரு ராமசாமி கிருஷ்­ணன், 52, ஓட்டிச் சென்றார். பேருந்­தில் ஒரு சில பய­ணி­களே இருந்த­னர். நடுத்­தர வய­தி­லி­ருந்த பயணி ஒருவர் சந்­தே­கத்­துக்கு இடம்­த­ரும் விதமாக வேறோர் இருக்கை­யில் இருந்த பொருள் ஒன்றை எடுத்­துக்­கொண்டு இறங்க முற்­பட்­டார்.