சாங்கி பகுதியில் மற்றொரு போர்க்கால எறிபடை அழிப்பு

சாங்கி பகுதியில் மற்றொரு போர்க்கால எறிபடை அழிப்பு

1 mins read
07c872cc-accb-43d1-af0a-20a312286f7d
-

சாங்கி கடற்­கரைப் பகு­தி­யில் போர்க்­கால வெடி­குண்டு எனச் சந்­தே­கிக்­கப்­படும் எறிபடை ஒன்று கடந்த செவ்­வாய்க்­கிழமை இரவு கண்­டு­பி­டிக்­க­ப் பட்டு பாது­காப்­பான முறையில் செய­லி­ழக்­கச் செய்­யப்­பட்­ட­தாக சிங்கப்­பூர் ஆயுதப் படையின் 'ஃபேஸ்­புக்' பதிவு தெரி­விக் கிறது. இந்த ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இரண்டா­வது போர்க்­கால எச்சம் இது. 105 மிமீ. அள­வி­லான பிரிட்­டிஷ் எறிபடை ஒன்று செங்காங்­கில் கடந்த மாதம் 22ஆம் தேதி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. "சிங்கப்­பூ­ரர்­கள் சீனப் புத்­தாண்­டுக் கொண்டாட்­டங் களில் மூழ்­கி­யி­ருந்த வேளை யில், சாங்கி கடற்கரைப் பகுதியில் உள்ள கட்­டு­மா­னத் தளம் ஒன்றில் போர்க்­கால எச்சம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து, நமது சிங்கப்­பூர் ஆயு­தப்­படை வெடிக்­கும் போர்த் ­த­ள­வா­டங்களை அகற்­றும் குழு செயலில் இறங்­கி­யது," என்று சிங்கப்­பூர் ஆயு­தப்­ படை தமது 'ஃபேஸ்­புக்' பக்­கத்­தில் பதி­வேற்­றி­ இ­ருந்தது.

போர்க்கால எச்சமெனச் சந்தேகிக்கப்படும் எறிபடை ஒன்றை செயலிழக்க வைக்கும் பணியில் சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர். படம்: சிங்கப்பூர் ராணுவத்தின் 'ஃபேஸ்புக்' பக்கம்