சிங்கப்பூர் வந்துள்ள துணிச்சல் தாய்

சிங்கப்பூர் வந்துள்ள துணிச்சல் தாய்

1 mins read
930cee9b-b987-47a0-8956-f82c8066f475
-

குழந்தை ஈன்றதும் பிரசவ விடுப்பில் ஓய்வெடுக்க மனமில்லாமல் தமது பிஞ்சுக் குழந்தையோடு உலகை வலம் வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஒரு பிரிட்டிஷ் மாது. கரேன் எட்வர்ட் என்னும் அவர் 2014ஆம் ஆண்டு பெண் குழந்தையைப் பிரசவித்ததும் தமது வாழ்க்கைத் துணைவருடன் ஒன்பது நாடுகளைக் கண்டு வரக் கிளம்பினார். அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனீசியா, ஹாங்காங், மலேசியா, நியூசிலாந்து, தைவான், வியட்னாம் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பின்னர் சிங்கப்பூருக்கும் அவர்கள் வந்துள்ளனர். மரினா பே சேண்ட்ஸில் தாயும் சேயும் இருப்பதைப் போன்ற படம் சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.