போர் வீரர்களுக்கு அஞ்சலி

போர் வீரர்களுக்கு அஞ்சலி

1 mins read
ca2ef27a-9302-44f8-9c65-250f54c467e2
-

49வது போர்க்கால நினைவு அஞ்சலி நிகழ்ச்சி போர் நினைவுப் பூங்காவில் நேற்று நடைபெற்றது. பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போர்க்கால வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சிங்கப்பூர் ஜப்பானிடம் சரண் அடைந்த பிப்ரவரி 15ஆம் தேதி முழுமைத் தற்காப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு நிகழ்வாக 'நமது எதிர்காலம்' கண்காட்சியில் நேற்று பங்கேற்ற தற்காப்புக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், 'ஒன்று சேர்ந்து சிங்கப்பூரை வலுவாக வைத்திருப்போம்' என்ற இந்த ஆண்டுக்கான முழுமைத் தற்காப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். நமது சமூக, மனோவியல் தற்காப்புகளை மேலும் வலுப்படுத்த நாம் இன்னும் கடுமையாகச் செயல்பட வேண்டியுள்ளது என்றார் அவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்