மேண்டலே ரோடு கட்டுமானத் தள விபத்தில் ஊழியர் பலி

மேண்டலே ரோடு கட்டுமானத் தள விபத்தில் ஊழியர் பலி

1 mins read
f3bbccc0-2f59-4f46-b104-69a3f4daabd9
-
Google News Preferred Icon

மேண்டலே ரோட்டில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் ஊழியர் ஒருவர் மாண்டார். இறந்த அந்த ஊழியர் எந்த நாட்டைச் சேர்ந் தவர் என்ற விவரம் வெளியிடப் படவில்லை. அவருக்கு வயது 25 என்று நம்பப்படுகிறது. விபத்து நிகழ்ந்த அப்பகுதி லீ கோங் சியன் மருத்துவக் கல்லூரி வளாகக் கட்டுமானத் தின் ஒரு பகுதி. இந்தக் கட்டு மானப்பணி அடுத்த ஆண்டு இறுதிவாக்கில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர் மரணமடைந்ததை நேரில் கண்டதாகக் கூறும் இரு வேறு தரப்பினர், இந்தச் சம்ப வத்தை இரண்டு விதமாகக் கூறுகின்றனர். சிலர் அந்த ஊழியர் உயரமான இடத்தில் இருந்து விழுந்து விட்டதாகவும், சிலர் அந்த ஊழியர் நின்றிருந்த தொங்கு சாரம் விழுந்ததால்தான் அந்த ஊழியர் இறந்துவிட்டார் என்றும் கூறுவதாக நம்பப்படுகிறது. இந்த கட்டுமான விபத்தில் காயமடைந்த 57 வயது ஊழியர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை தெரிவித்ததாக நம்பப்படுகிறது.