தைப்பூசத்தில் தொண்டூழியம் புரிந்தவர்களுக்கு கௌரவம்

தைப்பூசத்தில் தொண்டூழியம் புரிந்தவர்களுக்கு கௌரவம்

1 mins read
d412b2a1-82b6-4d7a-8171-b66494e758dd
-

இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவின்போது கால நேரம் பாராது, களைப்பறியாது தொண்டூழியம் புரிந்த 500 நல்லுள்ளங்களைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார் வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன். சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் பிஜிபி அரங்கில் நேற்றிரவு நடந்த இந்நிகழ்ச்சிக்குப் பின் வந்திருந்தோருக்கு இரவு விருந்து பரிமாறப்பட்டது. ஒரே நேரத்தில் எல்லா தொண்டூழியர்களையும் அழைத்து கௌரவிக்க முடியாததால் வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் நடக்கும் இன்னொரு நிகழ்ச்சியில் மேலும் 500 தொண்டூழியர்கள் சிறப்பிக்கப்படவுள்ளனர். அந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருக்கிறார் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம். படம்: திமத்தி டேவிட்