நாடாளுமன்றம் செல்ல தனலட்சுமிக்கு வாய்ப்பு

நாடாளுமன்றம் செல்ல தனலட்சுமிக்கு வாய்ப்பு

1 mins read
a3b9fcd7-21df-42a2-8fb7-fef9468a8879
-

நீண்ட­நாள் தொழிற்­சங்க­வா­தி­யான 50 வயது கே.தன­லட்­சு­மியை நியமன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தேசிய தொழிற்­சங்க காங்கிரஸ் முன்­மொ­ழிந்­துள்­ளது. தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­மனை­யின் மூத்த துணை நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரி­யும் இவர், தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் மத்திய குழு, சுகாதாரப் பரா­ம­ரிப்புச் சேவை ஊழி­யர்­கள் சங்கம் ஆகி­ய­வற்­றின் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட உறுப்­ பி­ன­ராக உள்ளார். வேலை மறு­வ­டி­வமைப்பு முயற்­சி­களின் மூலம் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறையில் சிங்கப்­பூ­ரர்­களுக்கு வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்கி நிர்வாக பங்கா­ளி­களு­டன் பணி­யாற்­று­வ­தில் தன­லட்­சுமி முக்கிய பங்காற்­றி­யுள்­ளார் என்று அவ­ரது வேட்­பு­ம­னுவை ஆத­ரிக்­கும் அறிக் கை­யில் என்­டி­யுசி குறிப்­பிட்­டது.

நியமன நாடாளுமன்ற உறுப் பினராகத் தாம் தேர்வுபெற்றால் ஊழியர் நலன்களில் குறிப்பாக பெண்கள் நலன்களில் அக்கறை செலுத்துவேன் என்று கே.தனலட்சுமி குறிப்பிட்டார். "அனை­வ­ருக்­கும் முக்­கி­ய­மான விவகாரங்களான வேலைகள், வாழ்க்கைச் செல­வி­னம் போன்ற வற்றில் தொடர்ந்து அக்கறை செலுத்­து­வேன். குறிப்­பாக, பெண் கள் விவகாரங்களிலும் சுகாதாரப் பரா­ம­ரிப்பை கட்­டுப்­ப­டி­யா­ன­தாக ஆக்­கு­வதற்­கான மேம்பாடு­களிலும் சிறப்புக் கவ­ன­மும் முக்­கி­யத்­து­வ­மும் செலுத்துவேன்," என்றார் அவர்.