சரக்கு மின்தூக்கி விபத்தில் துப்புரவாளர் இறந்தது துரதிர்ஷ்டவச மரணமே

சரக்கு மின்தூக்கி விபத்தில் துப்புரவாளர் இறந்தது துரதிர்ஷ்டவச மரணமே

1 mins read
e4b84b1c-2b45-4703-81bc-c59b1409a81e
-

சிங்டெல் காம்செண்டரில் வேலை செய்து வந்த 58 வயது துப்புரவாளர் ஒருவர் சரக்கு மின்தூக்கி விபத்தில் சிக்கி இறந்தது துரதிர்ஷ்டவசமான மரணம் என்று மரண விசராணை அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதியன்று சிங்டெல் காம்செண்டரில் இருந்த சரக்கு மின்தூக்கிக்கும் தரைக்கும் இடையே திரு மாக் டெங் இயாவ் நசுக்கப்பட்டு உயிரிழந்தார். சம்பவம் நிகழ்ந்தபோது மின்தூக்கியின் பாகங்கள் பழுதடைந்திருந்ததால் அது பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. சம்பவம் நிகழ்வதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்துக்குத்தான் அந்த மின்தூக்கிக்குப் பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.