பெண்­களுக்கு தனி ரயில் பெட்டி தேவை­யில்லை: அமைச்சு

பெண்­களுக்கு தனி ரயில் பெட்டி தேவை­யில்லை: அமைச்சு

1 mins read
05abb562-8f94-4638-912c-df3713785b91
-

மான­பங்க சம்ப­வங்களில் 5% ரயில்­களில் நிகழ்ந்த­தாக உள்துறை அமைச்­சின் நாடா­ளு­மன்றச் செய­லா­ளர் திரு அம்ரின் அமின் நேற்று நாடா­ளு­மன்றத்­தில் கூறினார். கடந்த மூன்று ஆண்­டு­களில் எம்­ஆர்டி, எல்­ஆர்டி ரயில்­களில் சரா­ச­ரி­யாக 71 மான­பங்க சம்ப­வங்கள் நிகழ்ந்தன. ரயில்களில் 2013ல் 65, 2014ல் 79, 2015ல் 69 மான­பங்க சம்ப­வங்கள் நிகழ்ந்­துள்­ளன. ரயில்­களில் எச்­ச­ரிக்கை­கள், மகளி­ருக்கு தனி ரயில்­ பெட்­டி­கள் போன்ற பரி­சீ­லனை­கள் பற்றி கேள்­வி­கள் எழுப்­பப்­பட்­டன.

இதற்­குப் பதி­ல­ளித்த திரு அம்ரின், ரயில்­களில் நிக­ழந்த மான­பங்க சம்ப­வங்களின் எண்­ணிக்கை மிகவும் குறைவாக இருப்­ப­தால் இம்­மா­தி­ரி­யான நட­வ­டிக்கை­கள் தேவை­யில்லை என்று கூறினார்.