ஆர்ச்சர்ட் ரோட்டில் நீ ஆன் சிட்டி கடைத் தொகுதிக்கு வெளியே நேற்று நிகழ்ந்த விபத்தில் ஐந்து பேர் காயம் அடைந்தனர். நேற்றுக் காலை 11.45 மணி அளவில் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, ஒரு தீ அணைப்பு வாகனத் தையும் மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்களையும் அனுப்பி வைத்தது-. பின்னர் காயம் அடைந்த ஐவரையும் அது டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்த்தது. இந்த விபத்தில் இரண்டு பொதுப் பேருந்துகள் சிக்கியதாக நம்பப்படுகிறது. அவற்றில் ஒன்று எஸ்எம்ஆர்டிக்கு சொந்தமானது என்றும் மற்றொன்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ச்சர்ட் ரோடு விபத்தில் ஐவர் காயம்
1 mins read
-

