பேருந்தில் சிக்கி இந்தோனீசியப் பெண் மரணம்

பேருந்தில் சிக்கி இந்தோனீசியப் பெண் மரணம்

1 mins read

டோ டக் அவென்­யூ­வில் நேற்று முன்­தி­னம் பிற்­ப­க­லில் பொதுப் பேருந்­தில் சிக்கி 29 வயது இந்தோனீசியப் பெண் மர­ணம் அடைந்தார். பிற்­ப­கல் 12.30 மணிக்கு குமாரி வின்னி பிரா­டிவி என்ற அந்தப் பெண் மதிய உணவு சாப்­பி­டச் சென்ற­போது இந்த விபத்­தில் சிக்கி­ய­தா­கக் கூறப்­படு­கிறது. இந்த விபத்து தொடர்­பாக 50 வயது பேருந்து ஓட்­டு­நர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். பேருந்து வலது பக்கம் வளை­யும்­போது குமாரி பிரா­டிவி பேருந்­தில் சிக்­கி­ய­தாக நம்பப்­படு­கிறது. சம்ப­வம் அறிந்து பிரா­டி­வி­யின் தாயார் இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து சிங்கப்­பூ­ருக்கு வந்­துள்ளார்.