டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 63 வயது மாது ஒருவர் சாங்கி பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிர் இழந்தார். பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் தங்கியிருந்த அந்த மலாய் மாது, புதன்கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலை மோசமடைந்து வியாழன் அன்று அவர் மரணம் அடைந்தார் என சுகாதார அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. டெங்கிக் காய்ச்சல் உயர்வதைத் தடுப்பதில் ஒரே சமூகமாகத் தொடர்ந்து செயல் பட்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
டெங்கியால் 63 வயது மாது மரணம்
1 mins read
-

