2015 சிங்கப்பூர் பொதுத் தேர்தலின்போது பயன்படுத்தப் பட்ட வாக்குச்சீட்டுகளும் இதர ஆவணங்களும் துவாஸ் சௌத் எரியாலையில் நேற்று அழிக்கப்பட்டன. வாக்குகளின் ரகசியத்தன்மையை உறுதி செய்வதற்காக தேர்தல் முடிந்து ஆறு மாதங்கள் வரைக்கும் வாக்குச்சீட்டுகளும் மற்ற ஆவணங்களும் முத்திரையிடப் பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம். பாட்டாளிக் கட்சித் தலைவர் லோ தியா கியாங் உட்பட அக்கட்சி உறுப்பினர்கள் பலர் துவாஸ் எரியாலைக்கு நேரில் சென்று வாக்குச்சீட்டுகளும் ஆவணங்களும் எரிக்கப்படும் நிகழ்வைக் கண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
வாக்குச்சீட்டுகள், ஆவணங்கள் எரிப்பு
1 mins read
-

