கம்பஸ்வேலுள்ள தமது வீட்டில் நேற்று பிற்பகலில் மாது ஒருவர் இறந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. நேற்றிரவு ஆடவர் ஒருவரை போலிசார் சந்தேகத்தின்பேரில் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். அவர் இறந்தவரின் கணவர் என நம்பப்படுகிறது. இச்சம்பவம் குறித்த விவரங்கள் தெரியவில்லை. அவ்வீட்டில் 60 வயதுகளிலுள்ள தம்பதியும் அவர்களது இரு மகள்களும் வசிப்பதாக அண்டை வீட்டார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர். இந்தச் சம்பவத்தை கொலை என்று போலிசார் வகைப்படுத்தியுள்ளனர். படம்: சாவ் பாவ்
கம்பஸ்வேலில் மாது கொலை
1 mins read
-

