மக்கள் கழகத்துக்கு அமரர் லீயின் நினைவுப் பொருள்

மக்கள் கழகத்துக்கு அமரர் லீயின் நினைவுப் பொருள்

1 mins read
e34c0f2b-d243-4b6f-b898-f39ae529dbc2
-

சென்றாண்டு அமரர் லீ குவான் இயூவின் இறுதி யாத்­­­திரை­­­யில் அரசு மரியாதை செலுத்­­­தப்­­­பட்ட போது விண்ணை நோக்கி செலுத்­­­தப்­­­பட்ட 21 பீரங்கி குண்­­­டு­­­களின் கூட்டை வைத்து உரு­­­வாக்­­­கப்­­­பட்ட நினைவுப் பொருட்கள் மக்கள் கழகம் உள்­­­ளிட்ட 21 அமைப்­­­பு­­­களுக்கு வழங்கப்­­­பட்­­­டன. மக்கள் கழகத் துணைத் தலை­­­வ­­­ரும் பிர­­­த­­­மர் அலு­­­வ­­­லக அமைச்­­­ச­­­ரு­­­மான சான் சுன் சிங் மக்கள் கழ­­­கத்­­­தின் சார்பில் அந்த நினைவுப் பொருளைப் பெற்றுக் கொண்டார். "வரும் தலைமுறை களில் ஒவ்­வொ­ரு­வ­ரும் கழ­கத்­தின் நிறுவனரான அமரர் லீயின் 'ஒரே மக்கள், ஒரே நாடு' என்ற கோட்­பாட்டைப் பின்­பற்­று­வதை நாம் உறுதி செய்ய வேண்டும்," என்றார் சான் சுன் சிங்.

மக்கள் கழ­­­கத்தைச் சேர்ந்த 600 ஊழி­­­யர்­­­கள், அடித்­­­த­­­ளத் தலை­­­வர்­­­கள், தொண்­­­டூ­­­ழி­­­யர்­­­கள் ஆகியோர் கிங் ஜார்ஜ் அவென்யூ வில் இருக்­கும் கழ­­­கத்­­­தின் தலைமை­­­ய­­­கத்­­­தில் நேற்று நடந்த அந்த நிகழ்ச்­­­சி­­­யில் பங்­­­கேற்­­­ற­­­னர். சிங்கப்­பூர் ஆயு­தப்­படை, சிங்கப்­பூர் போலிஸ் படை, நாடா­ளு­மன்றம், தேசிய பூங்கா கழகம், ஊழல் குற்றத் தடுப்­புப் பிரிவு, வீடமைப்பு வளர்ச்­சிக் கழகம், பொதுப் ­ப­ய­னீட்­டுக் கழகம், சிங்கப்­பூர் நீர் வாரியம் உள்­ளிட்ட 21 அமைப்­­­பு­­­களுக்கு நினைவுப் பொருள் வழங்கப்­பட்­­­டது.