'லீ குவான் இயூ பிள்ளைத்தமிழ்' நூல் வெளியீடு

'லீ குவான் இயூ பிள்ளைத்தமிழ்' நூல் வெளியீடு

1 mins read
c7c0d276-75af-4e16-9cd2-86d4c8776f32
-

நம் நாட்டுத் தந்தைத் திரு. லீ குவான் இயூ மறைந்து ஓராண்டு நிறை­வு­றும் இந்தத் தரு­ணத்­தில், அவரை நினைவு கொள்ளும் வகையில் பல நிகழ்­வு­கள் நடந்து வரு­கின்றன. அவர் நினைவு நாளுக்­குச் சரி­யா­கப் பத்து நாட்கள் முன்னர், கடந்த ஞாயிற்­றுக்­கிழமை 13ஆம் தேதி 'லீ குவான் இயூ பிள்ளைத் தமிழ்' நூல் வெளியி­டும் அவர் பெருமை பேசும் கவி­ய­ரங்க­மும் நடை­பெற்­றன. காலாங் சமூக மன்றத்­தின் இந்திய நற்­ப­ணிக் குழுவும் இலக்­கிய வட்­ட­மும் இணைந்து நடத்­திய அந்த விழாவில் அரங்கம் நிரம்­பிய இலக்­கிய ஆர்­வ­லர்­கள் சூழ்ந்­தி­ருந்த­னர். நூலின் முதல் படியைத் அருண்மகிழ்­நன் வெளியிட, அதனைக் கவிஞர் முரு­க­டி­யான் பெற்றுக் கொண்டார். நூல் பற்றி டாக்டர் திண்­ணப்­பன் நல்­ல­தொரு உரை வழங்­கினார். மதுரைப் பொற்­கி­ழிக் கவிஞர் சொ சொ மீ ஐயா தலைமை­யில் நடை­பெற்ற ஒன்றரை மணி நேரக் கவி­ய­ரங்கம் பார்வை­யா­ளர்­கள் அனை­வரை­யும் மகிழ்ச்சி வெள்­ளத்­தில் ஆழ்த்­தி­யது.

தலை­வ­ரின் கவி வீச்­சுக்­குத் தோதாக, சிங்கைக் கவி­ஞர்­கள் இன்பா, வீர விஜ­ய­பா­ரதி, சீர்காழி செல்­வ­ராஜ், இராம வைரவன், ந.வீ.விச­ய­பா­ரதி, கி.கோவிந்த­ராசு ஆகியோர் முறையே லீ குவான் இயூ எங்களுடைய தலைவர், ஆசான், தந்தை, தாய், காவலர், தோழர் என்ற தலைப்­பு­களில் கவி பாடினார்­கள்.

'லீ குவான் இயூ பிள்ளைத்தமிழ்' நூலாசிரியர் வரதராசன் (இடது) உடனிருக்க அருண் மகிழ்நன் (நடுவில்) அந்நூலை வெளியிட, கவிஞர் முருகடியான் (வலது) பெற்றுக்கொண்டார். படம்: வரதராசன்.