கான்: நீரிழிவுக்கு எதிராக 'போர்'

கான்: நீரிழிவுக்கு எதிராக 'போர்'

1 mins read
8409a911-a848-458c-a347-175f6fa75240
-

தமிழவேல்

சிங்கப்­பூ­ரர்­களை அதிகம் பாதித்து சுகா­தா­ரத் துறைக்கு பெரிய சவாலாக உள்ள நீரிழிவு நோய்க்கு எதிராக போர் தொடுத்­துள்­ள­தாக சுகாதார அமைச்­சர் கான் கிம் யோங் அறிவித்துள்ளார். இந்த நோயால் சிங்கப்­பூ­ருக்கு ஏற்­கெ­னவே $1 பில்­லி­ய­ னுக்கு மேல் செல­வா­கி­யுள்­ளது. மேலும் சிங்கப்­பூ­ரில் தற்­போது 400,000க்கும் அதி­க­மா­னோ­ருக்கு நீரிழிவு நோய் உள்ளது. இதில் மூன்றில் ஒரு­வ­ருக்கு நோய் இருப்­பது தெரிவதில்லை. தங்களுக்கு நீரிழிவு உள்ளதை அறிந்த­வர்­களில் மூன்றில் ஒருவர் அதைக் கட்­டுப்­படுத்­து­வ­தில்லை என்று நேற்று நாடா­ளு­ மன்றத்­தில் நடந்த சுகாதார அமைச்­சின் நிதி ஒதுக்­கீட்டு விவாதத்­தின்போது கூறினார் அமைச்­சர் கான்.

"நீரிழிவு நோயைக் கண்­டறி யா­மல் விட்­டால் அல்லது சிகிச்சை அளிக்­கா­மல் அல்லது முறையான சிகிச்சை அளிக்­காது இருந்தால் அந்நோய் இதய நோய், பக்­க­ வாதம், சிறு­நீ­ர­கக் கோளாறு, கண் பார்வை இழப்பு, கை கால் இழப்பு போன்ற பிரச்­சினை­களை விளை­விக்­கும்," என்றார் திரு கான் கிம் யோங். நீரிழிவு நோய் பிரச்­சினை­யால் ஒவ்வொரு நாளும் சரா­ச­ரி ­யாக நான்கு சிங்கப்­பூ­ரர்­கள் கை, கால்களை இழக்­கின்ற­னர் என்றும் அவர் குறிப்­பிட்­டார்.